மாவீரர் நாளுக்கு மட்டு நீதிமன்றமும் தடை!

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளையோ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களையோ முன்னெடுக்க மட்டக்களப்பு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அரசடித்தீவை சேர்ந்த நடராசா சுரேஷ், கொக்கட்டிச்சோலை குகதாஷ் முத்துலிங்கம், களுவாஞ்சிகுடி நாகலிங்கம் சங்கரப்பிள்ளை, நொச்சிமுனை சசிகரன் நிஷாந்தன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதைதடுக்கும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற கட்டளை கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் நேற்று (20) மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்பிஅரியநேத்தினிடம் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!