தொடர்ச்சியாக தற்கொலை செய்துவரும் அவுஸ்திரேலிய ராணுவ வீரர்கள்: தொடரும் மர்மம்!

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய ராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக வெளியான பகீர் அறிக்கைக்கு பின்னர் ராணுவ வீரர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் சில அவுஸ்திரேலிய துருப்புக்கள் நிராயுதபாணியான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றதாக இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தின.

இந்த விவகாரம் தற்போது அவுஸ்திரேலிய அரசாங்க ஆதரவுடைய விசாரணையை முன்னெடுக்க முடிவாகியுள்ளது.

இந்த நிலையிலேயே, மூன்று வார இடைவெளியில் 9 அவுஸ்திரேலிய ராணுவத்தினர் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், அவுஸ்திரேலிய துருப்புகள் நிராயுதபாணியான ஆண்களையும் குழந்தைகளையும் கொல்லும் காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் வெளியாகி அவுஸ்திரேலியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த தகவலும் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய துருப்புகள் ஆப்கானிஸ்தானில் சுமார் 39 கைதிகள் மற்றும் அப்பாவி மக்களை கொன்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இங்த விவகாரம் தொடர்பாக மொத்தம் 465 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கை வெளியாகியுள்ளது.

நான்காண்டுகள் நீண்ட விரிவான விசாரணை மற்றும் ஆய்வுகளுக்கு பின்னரே, 2005 முதல் 2016 வரையான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய துருப்புகளின் இந்த கொடூர செயற்பாடு குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இருப்பினும், தற்போது தற்கொலை செய்து கொண்ட ராணுவத்தினருக்கும் ஆப்கானிஸ்தானில் போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!