வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் இராணுவத்தளபதி விசேட அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலையினை எதிர்கொண்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இராணுவத்தளபதி கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனிடையே இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்பு கொண்டு இலங்கையர்கள் தொடர்பில் விபரங்களை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக எதிர்வரும் வாரம் முதல் நாள்தோறும் விசேட விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய நாடுகளில் நிர்க்கதிக்குள்ளானவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!