யாழ்ப்பாணத்தில் பிசிஆர் பரிசோதனை – 4 பேருக்கு தொற்று உறுதி!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று 322 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கும், கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருக்கும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப் படும் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!