மெய்நிகர் முறையில் அமைச்சரவைக் கூட்டம்!

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டம் காணொளி தொடர்பாடல் மூலம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ‘மெய்நிகர்’ முறையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தின் நடைமுறை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் யோசனைக்கேற்ப இந்த அமைச்சரவைன் கூட்டம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அமைச்சர்கள் அனைவரும் அவர்களது காரியாலயங்களில் இருந்து காணொளி தொடர்பாடல் ஊடாக தொடர்பு கொண்டிருந்தனர்.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!