மன்னார் புதைகுழியில் நேற்று சிறுவனின் முழுமையான எலும்புக்கூடு மீட்பு!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் நேற்று 19 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகள் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையில் இடம் பெறுகின்றது. அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா குழுவினரும் அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வியாழன் வெள்ளி ஆகிய இரு தினங்களும் குறித்த வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் ”சதொச” வளாகத்தில் இருந்து உரிய அனுமதியுடன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற அகழ்வுகளின் போது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் குறித்த வளாகத்தின் நுழைவுப் பகுதியில் இருந்து ஒரு முழு மனித எலும்பு கூடு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. குறித்த எலும்புக்கூடு சிறு வயதுடைய ஒருவரின் மனித எச்சமாக காணப்படுகின்ற போதும் அது தொடர்பான உண்மை தன்மையும் சந்தேகமாகவே உள்ளது.

தொடர்சியாக ஆங்காங்கே சிறு சிறு மனித எச்சங்கள் காணப்பட்டாலும் நேற்று அகழ்ந்தெடுக்கப்பட்ட முழு அளவிலான எலும்பு கூடு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற 19 ஆவது நாள் அகழ்வு பணிகள் மதியம் 12மணியளவில் நிறைவடைந்தன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!