சுமந்திரன் இலக்கு வைக்கப்பட்டாரா? – மறுக்கிறார்!

ஒட்­டு­சுட்­டா­னில் கிளை­மோர் உள்ளிட்ட வெடிபொருட்கள் நேற்று மீட்­கப்­பட்ட நிலை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரனே தாக்­கு­த­லா­ளி­களின் இலக்கு என்று வெளி­யான தக­வல்­களை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி ­ரன் மறுத்­தார். அவ்­வாறு எனக்கு எந்த அறி­வித்­த­லும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அந்­தச் சம்­ப­வத்­தின் இலக்கு நான் இல்லை என்று அவர் குறிப்­பிட்­டார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரனை இலக்கு வைத்து முன்­னாள் போரா­ளி­கள் சிலர் புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளால் தயார்ப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர் என்­றும், இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரிவு இது தொடர்­பில் தக­வல் வழங்கி 4 நாள்­க­ளில் கிளை­மோர் குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன என்று இணை­யத்­த­ளங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!