நேற்றும் கொட்டித் தீர்த்த கடும்மழை- குடாநாட்டில் பல இடங்கள் வெள்ளத்தில்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் கொட்டித் தீர்த்த கடும் மழையினால் மேலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யாழ்ப்பாணம் நகர், வலிகாமம், தென்மராட்சி உள்ளிட்ட பிரதேசங்களில் நேற்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் நேற்ற பிற்பகல் முதல் மழை கொட்டியது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால், மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கின.

2008ம் ஆண்டு ஆண்டு நிஷா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலமை போன்று நிலைமை தற்போது யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் புரெவி புயலால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாங்களில் தங்கியிருந்த மக்கள் வீடு திரும்பிய நிலையில் மீளவும் நலன்புரி நிலையங்களுக்குத் திரும்புவதாகம் அதிகாரிகள் கூறினர்.

பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஓடுவதற்கு இடமில்லாமல் பல வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!