சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுமார் எண்ணாயிரம் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சினால் அமைச்சரவையில் யோசனைதிட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 20 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் தடுப்புக்காவில் உள்ள சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மரண தண்டனை கைதிகளிகளின் தண்டனை காலத்தை 20 வருடங்களாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!