ஷானியின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

குற்றப்புலனாய்வுத் திணைக்ளத்தின் முன்னாள் பணிப்பானர் ஷானி அபேசேகரவின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் குறித்த விண்ணப்பம் இன்று (09) நிராகரிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன மெண்டிஸ் ஆகியோர் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.

இவர்களில் ஷானி அபேசேகர கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!