கேகாலை வைத்தியரின் கொரோனா தடுப்பு மருந்தை சபாநாயரும் அருந்தினார்!

சர்ச்சைக்குரிய கேகாலை வைத்தியர் தம்மிக பண்டார தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து நேற்று நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்தினை சபாநாயகர் உட்பட பல ஆளும்கட்சி உறுப்பினர்கள் பருகிப் பார்த்துள்ளனர். சுகாதார அமைச்சர் உட்பட பல அமைச்சர்களும் அதனை பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட மருந்தினை கொள்வனவு செய்வதற்காக பெருமளவான மக்கள் வைத்தியரின் கேகாலை வீட்டிற்கு படையெடுத்ததை அடுத்து மருந்து விநியோகத்துக்கு தடைவிதிகக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!