கிழக்கில் 3 பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டன!

கிழக்கில் 3 பொலிஸ் பிரிவுகள், இன்று காலை 6.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில், முடக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, மற்றும் ஆலையடிவேம்பு பொலிஸ் பகுதிகளே முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், அக்கரைப்பற்று – 5 அக்கரைப்பற்று – 15 அக்கரைப்பற்று நகரம் – 3 ஆகிய இடங்களும்,

அட்டாளைச்சேனை பொலிஸ் பகுதியில், பாலமுனை – 1 ஒலுவில் – 2 அட்டாளைச்சேனை – 8 ஆகிய இடங்களும்,

ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் ஆலையடிவேம்பு – 8/1 ஆலையடிவேம்பு – 8/3 ஆலையடிவேம்பு – 9 ஆகிய இடங்களும் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் அலுபொத கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!