யாழ் – திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச்சந்தை தொகுதியில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 312 பேருக்கு கடந்த 16 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ் மருதனார்மடம் கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!