இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.
அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், மக்கொன பிரசேத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் வதுபிடிவல பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!