பதவி விலகினார் சிறிதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து சிறிதரன் விலகியுள்ளார்.

“ தான் கடந்த 5 வருடமாக குறித்த பதவியில் இருந்துள்ளேன். அது மட்டுமல்லாது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் ஆரோக்கியமாக இல்லாமையாலும், அவர்கள் ஊடகங்களில் கொறடா என்கின்ற பதவியினை வைத்து சிறீதரன் பணம் சம்பாதிப்பது போல் ஒரு மாயை உருவாக்கி வருகிறார்கள்.

ஆகவே அவ்வாறானதொரு பதவி எனக்கு தேவை இல்லை என்று அப் பதவியில் இருந்து வெளியேறி உள்ளேன். குறித்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் உத்தியோகபூர்வமாக தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!