யாழில் 24 மணி நேரத்தில் 66 மி.மீ மழை வீழ்ச்சி!

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வளிமண்டல ஆராட்சி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாடு பூராகவும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று (18) காலை மணியிலிருந்து இன்று (19) காலை 8 மணிவரையான 24 மணி நேரத்தில் 66.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறிப்பாக யாழ்நகரப் பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் இன்று நாட்டின் பலபாகங்களில் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளது. எனவே இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் யாழ் மாவட்ட மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!