பசிலின் கூட்டத்தில் பங்கேற்ற தவிசாளருக்கு கொரோனா உறுதி!

அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பசில் ராஜபக்ஷவின் கூட்டத்தில் அவர் பற்கேற்றிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி இவருக்குப் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அவர் வெளியில் பல இடங்களுக்கு சென்று வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இம்மாதம் 18ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் கண்டியில் நடைபெற்ற நிகழ்விலும் இவர் கலந்துக்கொண்டிருந்தார்.

கடந்த 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானதில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளர் செயற்பட்டிருப்பதாக பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இதேவேளை அவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்று கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு சுகாதாரப் பாதுகாப்புகளுடன் அவர் அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!