கொரோனா சட்டத்தை மீறிய தவிசாளரை கட்சியில் இருந்து விலக்கியது இ.தொ.கா

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிச் செயற்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதியான அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்செல்வனை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடைநீக்கம் செய்துள்ளது.

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை மீறி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற கதிர்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கட்சியின் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஏனைய அமைச்சர்கள், பிரதேச, நகர சபை தவிசாளர்கள் என அரச முக்கியஸ்தர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே கதிச்செல்வன் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!