நாட்டில் வாகன விபத்துக்களினால் தொடர்ந்தும் அதிகரித்து வரும் உயிரிழப்புக்கள்!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இதுவரை 600 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் கடந்த 20 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசேட திட்டத்தில் சுமார் ஒன்பதாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிபபொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!