சபாநாயகரும் தனிமையில்!

சபாநாயகரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த நபர் சபாநாயகரின் அலுவலகத்தில் உள்ள பலரிடமும் நெருக்கமாக இருந்துள்ளார்.இதனையடுத்து அந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பலரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!