தாயும் மகளும் கிணற்றில் சடலங்களாக மீட்பு!

வவுனியா – பறநட்டகல் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, தாயும், மூன்று வயது பிள்ளையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு 12 மணியவிளவில் காணாமல்போயிருந்த நிலையில், உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றுகாலை, வீட்டுக்கு அருகில் இருந்த வயல்வெளி கிணறு ஒன்றில் இருந்து, அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள், அதே பகுதியை சேர்ந்த ரமேஸ் ஜெயலலிதா (வயது – 42) மற்றும் அவரது மூன்று வயது மகளான றிதுர்சனா ஆகியோர் ஆவர்.

சடலங்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!