யாழ்ப்பாணத்தில் ஆறு பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் நேற்று மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும் கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் மந்திகை வைத்தியசாலையில் தலைவலி, இருமல், வாந்தி என்பவற்றுக்காகச் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் , அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருக்குத் தொற்று ஏற்பட்ட வழி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பாக ஆராயப்படுகின்றது என்றும் சுகாதாரப் பிரிவினரிடம் இருந்து அறிய முடிகின்றது.

இவர் 3 தினங்களுக்கு முன்னர் மருதனார்மடம் வந்திருந்தாக சுகாதாரப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அதனால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!