இன்று அரசுடன், நாளை கூட்டமைப்புடன் – ஜெய்சங்கர் சந்திப்பு!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நாளை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

அதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!