முகக்கவசம் அணியாத 14 பேருக்கு தொற்று; 510 முடிவுகள் இன்று!

முகக்கவசம் அணியாமல் நாடமாடியதால் நேற்று (5) கைது செய்யப்பட்ட 1,060 பேரில், 550 பேருக்கு மேற்கொண்ட சோதனையில் 14 பேருக்கு அன்ரிஜன் கருவி ஊடாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 510 பேருக்கு பிசிஆர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் இன்று (6) வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

1,060 பேரும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!