மட்டக்களப்பில் நேற்றும் 25 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸார் உள்ளிட்ட 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து எழுமாற்றான கொரோனா பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி நேற்ற மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன், பிசிஆர் பரிசோதனைகளில் ஏறாவூரில் இரு பொலிஸார் உள்ளிட்ட மூவருக்கும், காத்தான்குடியில் 20 பேருக்கும், வெல்லாவெளியில் ஒருவருக்கும், மட்டக்களப்பில் 25 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 பேருக்கும், காத்தான்குடியில் 146 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!