கொரோனா தொற்றினால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவரும், ஹொரண பகுதியை சேர்ந்த 87 வயதுடைய பெண்ணொருவரும், இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டிருந்த மேலும், 656 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின எண்ணிக்கை 40 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 7 ஆயிரத்து 170 பேர் தெடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக, நாட்டில் நேற்றைய தினம் 15 ஆயிரத்து 472 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!