பேருந்து கவிழ்ந்து விபத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

பொலன்னறுவை – பராக்கிர சமுத்திரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலன்னறுவை லங்காபுர பகுதியில் பகுதியில் தொழிலாளர்கள் சிலர் பயணித்த பேரூந்து ஒன்றே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!