ட்ரம்பின் நிலையே இவருக்கும் ஏற்படும்!

எதிர்கட்சியினர் தங்கள் கடமையை மனம்தளராமல் செய்வதால் ஜனாதிபதி சீற்றமடைந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

தனது முதல்பெயரை பயன்படுத்தியதால் ஜனாதிபதி சீற்றமடைந்துள்ளார் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் இதன் காரணமாக அவர் விடுதலைப்புலிகளின் தலைவரிற்கு நிகழ்ந்தது குறித்து ஹரீன் பெர்ணான்டோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு இரண்டு குணாதியசங்கள் உள்ளன என அவரே தெரிவித்துள்ளார். ஒன்று பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை வெளிப்பட்ட குணாதிசயம் மற்றையது தற்போது காணப்படுவது எனவும் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதிஇரட்டை வேடமிடுகின்றார் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கதாநாயகனாக அரசியலுக்கு வந்தவர் இன்று வில்லனாக மாறியுள்ளார் ஜனாதிபதி குறித்த அதிருப்தி மக்கள் மத்தியில் அதிகரிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இராணுவமயமாக்கலை முன்னெடுக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

42 இராணுவ அதிகாரிகள் ஏற்கனவே பல பதவிகளிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் மேலும் 25 பேர் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்ப் தனது நடவடிக்கைகளில் தோல்வியேற்பட்டதை தொடர்ந்து சர்வாதிகாரியாக மாறி நாடாளுமன்றத்திற்குள் கலகத்தில் ஈடுபடுமாறு மக்களை தூண்டினார். அவரின் நிலைமையே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!