24 மணிநேரத்தில் 24 பேருக்கு கொரோனா! – மோசமடையும் மட்டு. நிலைமை.

மட்டக்களப்பில் 24 மணிநேரத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 420 அதிகரித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.

இவர்களில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் 12 பேர் என்பதுடன், காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி சுகாதாரப் பிரிவுகளில் தலா நால்வரும் வெல்லாவெளி சுகாதாரப் பிரிவில் மூவரும் களுவாஞ்சிக்குடி சுகாதாரப் பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பில் இதுவரை தொற்று கண்டறியப்பட்ட 420 பேரில் 145 பேர் குணமடைந்துள்ளதுடன் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!