சீனாவின் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி விசேட அவதானம்!

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சீனாவின் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சீன ஜனாதிபதிக்கு, கோட்டாபய ராஜபக்ஸவினால் கடிதமொன்று அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

சீனாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் ஊடாக இந்த கடிதம் சீன ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதியின் கோரிக்கை கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், சீன வெளியுறவு அமைச்சின் பணிப்பாளர், தொடர்ச்சியாக இரண்டு நாடுகளும் ஆதரவளித்து செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு தடுப்பூகளை விநியோகிப்பது குறித்து விரைவில் அறிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!