மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் 120 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறித்த கைதிகளுள் 116 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நால்வர் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகின்றது.
மேலும் குறித்த கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கலவரத்தின் போது கைதிகள் சிறைச்சாலைகள் சொத்துக்களுக்கு தீ மூட்டியமையினால் 60 மில்லியன் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள் கூறுகின்றது.
இந்த கலவரத்தில் 11 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் துப்பாக்கிச் சூட்டிலேயே உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் வௌியாகியிருந்தது.
மேலும் இதற்கு காரணமான 25 பேரை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!