விவசாயத்துறையில் இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட நடவடிக்கை!

விவசாயத்துறையில் இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கிராமத்துடனான உரையாடல் வேலைத்திட்டத்தின் 6 ஆவது கட்டம் ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதியில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதன்போது கேட்டறிந்துள்ளார்.

மேலும் குறித்த பகுதிமக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!