மரக்கன்றுகள் கொடுங்கள்: – மாமனாரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மாப்பிள்ளை

ஒடிசா மாநிலத்தில் நபர் ஒருவர் தனது திருமணத்திற்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம், மாறாக மரக்கன்றுகள் கொடுங்கள் எனக்கூறி மாமனாரை மட்டுமல்ல அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார். பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்த சரோஜ்காந்த் பிஸ்வால் எனும் ஆசிரியருக்கும், அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஷ்மி ரேகாவுக்கும் திருமணம் நிச்சயமானது.

இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக பிஸ்வால், தனது மாமனாரிடம் பணம் நகைக்கு பதிலாக மரக்கன்றுகளை பரிசாகக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து,கடந்த 22 ஆம் திகதி சரோஜ் காந்த் பிஸ்வால்-ராஷ்மிரேகா திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மணமகளின் தந்தை மரக்கன்றுகளை வரதட்சணையாக அளிக்க, அதை மணமக்கள் தங்களை வாழ்த்த வந்தவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர். பிஸ்வாலை நினைத்து அந்த கிராமத்து மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!