பூநகரியில் பெண் கொலை – கணவன் கைது!

கிளிநொச்சி- பூநகரி, தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றது.

தெளிகரையில் அமைந்துள்ள பெண்ணின் வீட்டில் வைத்தே அவர், கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயிற்றுப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 37 வயதுடை ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!