அரசாங்கத்தின் எந்தவொரு நிதியும் வீணடிக்கப்படவில்லை : ஜானக வகும்புர!

இரத்தினபுரியில் அமைக்கப்பட்டுவரும் மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச இரத்தினக்கல் மத்திய நிலையத்துக்கு மத்திய அரசாங்கத்தின் எந்தவொரு நிதியும் செலவிடப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் இரத்தினக்கல் துறையையும் ஏனைய தொழில்0துறைகளையும் மேம்படுத்தும் நோக்கில் குறித்த சர்வதேச இரத்தினக்கல் மத்திய நிலையம் அமைக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், சர்வதேச இரத்தினக்கல் வியாபாரிகளை இரத்தினபுரி பகுதிக்கு அழைத்துவர முடியும் எனவும், குறித்த பகுதி மக்களுக்கு இதன் ஊடாக பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பல தசாப்தங்களின் கனவாக காணப்பட்ட குறித்த சர்வதேச இரத்தினக்கல் மத்திய நிலையம் தற்போது நனவாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!