கால்பந்தாட்டத்தில் தோல்வியடைந்ததால் 24 மணிநேரத்தில் 11 ரசிகர்கள் சுட்டுக்கொலை!

கால்பந்தாட்டத்தில் தோல்வியடைந்ததால், மர்ம நபர்கள் சிலர் மெஸ்சிகோ ரசிகர்கள் 11 பேரை சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஸ்யாவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது, தென்கொரிய அணியை 2-1 என்று கணக்கில் மெக்ஸிகோ அணி வீழ்த்தியது. போட்டியில் பெற்ற வெற்றியை மெக்ஸிகோ ரசிகர்கள் பலரும் வீதிகளில் கொண்டாடியுள்ளனர்.

அதேசமயம், Texas எல்லை பகுதியில் உள்ள ஒரு கார் செட்டில் கால்பந்தாட்ட போட்டியை பார்த்து கொண்டிருந்த 6 பேரை, திடீரென காரில் துப்பாக்கிகளுடன் வந்திறங்கிய மர்ம நபர்கள், சரமாரியாக சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதேபோன்று, மற்றொரு பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடையில் போட்டியை கண்டுகளித்த கடையின் உரிமையாளர்கள் இருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் 3 பேர் என, 5 ரசிகர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது.

அடுத்தடுத்து 24 மணி நேரத்தில் நடைபெற்ற 11 கொலை சம்பவம் பொலிஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு நபர்கள் மட்டுமே என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!