தகனம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்! – ஐ.நா நிபுணர்கள் அழுத்தம்.

இலங்கை அரசு கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடலை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனாவால் இறப்பவர்களை தகனம் செய்தலே ஒரேவழி என தெரிவித்து கட்டாய தகனம் செய்தல் மனித உரிமை மீறலாகும். இது முஸ்லிம் மற்றும் சிறுபான்மை இனங்களின் நம்பிக்கைகளுக்கு முரணானது. வன்முறைகளை தூண்டக்கூடியது.

இலங்கையிலோ அல்லது பிற நாடுகளிலோ உடல்களை அடக்கம் செய்வது கொரோனா பரவும் ஆபத்தை கொண்டது என்பதை நிறுவன அறிவியல் ஆதாரங்களை இல்லை என்றும், கட்டாய தகனம் இலங்கையில் தொடரக்கூடாது என்றும், ஐ.நாவின் நான்கு சிறப்பு அறிக்கையாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!