வடக்கிற்கு 10,400 டோஸ் தடுப்பு மருந்துகள் தேவை!

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்து 400 பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வடமாகாணத்தில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய சுகாதாரத் துறையினரின் விவரங்களை சுகாதார அமைச்சு கேட்டிருந்தது.

அதனடிப்படையில் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 9 ஆயிரத்து 400 பேர் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்றனர்.

அவர்களும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ கல்வியாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் என ஆயிரம் பேருக்கும் சேர்த்து 10 ஆயிரத்து 400 பேரின் விவரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!