300 ஐ தாண்டியது மரணம் – நேற்றும் 859 859 கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 யை தாண்டியுள்ளது. நாட்டில் இறுதியாக 8 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொறட்டுவை, பிலியந்தலை, சாய்ந்தமருது, கொலன்னாவ, பாணந்துறை, காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 ஆண்களும், 4 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொவிட் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 305ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நேற்று 859 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்து 445ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!