கிழக்கு முனையம் யாருக்கும் கிடையாது!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ, குத்தகைக்கு விடவோ அல்லது அது தொடர்பில் வெளி நாட்டுடன் எந்தவொரு ஒப்பந்தம் செய்யப்படவோ இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கவுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய நிலை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

“இந்த விடயம் தொடர்பில் குற்றஞ்சாட்டுவதற்குரிய தேவை எவருக்கும் கிடையாது. கிழக்கு முனையம் எமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்ளேயே காணப்படும். எமது தீர்மானம் குறித்து துறைமுக தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கவுள்ளோம்.

ஆகவே, இதற்கான பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை. அமைச்சரவையிலுள்ள 95 வீதமானவர்கள், கிழக்கு முனையத்தை வௌி நாட்டவர்களுக்கு வழங்கக்கூடாது என்ற நிலைபாட்டிலேயே உள்ளனர்.

தேசிய வளங்களை விற்பனை செய்வது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை. அந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு எமது அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்யவில்லை” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!