கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 14 பேர் பலி!

நாட்டின் பல பாகங்களில் கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் நேற்றைய நாளில் 7 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், முன்னதாக விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் நால்வர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!