வடக்கில் நேற்றும் 1,530 பேருக்கு தடுப்பூசி!

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் நேற்று இரண்டாம் நாளில் 1,530 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி முதல் நாளான 2,997 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று 1,530 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!