கொரோனாவுக்கு இதுவரை 162 டாக்டர்களும், 107 நர்சுகளும் பலி!

கொரோனாவுக்கு இதுவரை 162 டாக்டர்களும், 107 நர்சுகளும் பலியாகி இருப்பதாக மாநிலங்களவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, கொரோனாவுக்கு இதுவரை எத்தனை சுகாதார பணியாளர்கள் இறந்துள்ளனர் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பதில் அளித்தார்.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 162 டாக்டர்களும், 107 நர்சுகளும், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் (ஆஷா) 44 பேரும் பலியாகி உள்ளனர். இவை, கடந்த மாதம் 22-ம் தேதி வரை மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் என்று கறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!