பைசர் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கிய நியூசிலாந்து அரசு!

உலக நாடுகளை உலுக்கி கொண்டு வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது.

அந்த வகையில், அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த நியூசிலாந்து அரசு முறையாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக தூய்மை பணியாளர்கள், நர்சுகள், பாதுகாப்பு அலுவலர்கள், சுங்க மற்றும் எல்லை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், ஓட்டல் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசியை செலுத்த நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. நியூசிலாந்தில் இதுவரை 2,324- பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!