தன்னை விட 11 வயது குறைந்த இளைஞன் மீது ஆசை கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

இந்தியாவில் தன்னை விட 11 வயது அதிகமான பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் அவரை இளைஞர் கொலை செய்த சம்பவத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் சாகிப் கான். இவர் மனைவி ஹீனா (32). இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அதே வீட்டில் அவர்களுக்கு தெரிந்த நபரான சுமித் குமார் (21) என்பவரும் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஹீனாவுக்கும், சுமித்துக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கணவரை தான் பிரிய விரும்புவதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் சுமித்தை ஹீனா வற்புறுத்தி வந்தார்.

ஆனால் ஏற்கனவே திருமணமான மற்றும் தன்னை விட 11 வயது மூத்தவரான ஹீனாவை மணக்க முடியாது என சுமித் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து ஹீனாவை கொலை செய்ய சுமித் முடிவு செய்தார்.

இதற்காக தனது நண்பர்கள் அருண், அமீத், ரவி ஆகிய மூன்று பேரை கூட்டு சேர்த்து கொண்ட சுமித் அவர்களுக்கு ரூ 1 லட்சம் பணம் கொடுத்தார்.

மேலும் ஹீனா வீட்டில் நிறைய பணம், நகைகள் இருப்பதாகவும் அவரை கொலை செய்த பின்னர் அதை கொள்ளையடிக்கலாம் எனவும் நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.

அதன்படி வீட்டில் சாகிப் இல்லாத சமயத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஹீனாவை குல்லாவை வைத்து கழுத்தை நெரித்துள்ளனர்.

அவர் இறந்துவிட்டதாக முதலில் அனைவரும் கருதிய நிலையில் ஹீனாவுக்கு மூச்சு இன்னும் இருக்கிறது பார் என அருண் கூறினார்.

பின்னர் சுமித் கத்தியை வைத்து ஹீனா கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.

இதை தொடர்ந்து வீட்டில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு அனைவரும் தப்பினர்.

இந்த வழக்கில் சிக்காமல் இருக்க சுமித் மீண்டும் அந்த வீட்டுக்கு வந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த ஹீனாவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்.

அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மருத்துவமனைக்கு வந்த பொலிசார் சுமித்திடம் விசாரித்த போது பயத்தில் நடந்த அனைத்தையும் அவர் ஓப்பு கொண்டார்.

இதையடுத்து சுமித் மற்றும் அவரின் மூன்று நண்பர்களையும் பொலிசார் கைது செய்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!