பொ 2 பொ பேரணி தொடர்பாக ரவிகரனிடம் மீண்டும் விசாரணை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்l முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். நேற்று மாலை 07.00மணியளவில் ரவிகரனின் இல்லத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக கடந்த திங்களன்று ஏற்கனவே ரவிகரனிடம் முல்லைத்தீவு பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!