சர்வமத தலைவர்களுக்கு கொரோனா தடுப்பூசியினை வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

சர்வமத தலைவர்களுக்கு கொரோனா தடுப்பூசியினை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி கண்டி மாவட்டத்தில் இன்று பௌத்தமத தலைவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேனை நாடாளாவிய ரீதியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.

இதற்கமைய கிராம உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள விசேட மத்திய நிலையங்களில் இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!