ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக சஜித் குற்றச்சாட்டு!

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை, இன்று சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து, மற்றுமொரு பாதுகாப்பான சிறைச்சாலைக்கு மாற்ற, அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைப்பதன் ஊடாக அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவருடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், எனக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவரை அங்குணுகொலபெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்துவைத்திருப்பது அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என நான் நினைக்கின்றேன்.

ரஞ்சன் ராமநாயக்கவின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். அவருக்கு ஏதேனும் சிக்கல்கள் அல்லது துன்புறுத்தல்கள் ஏற்பட்டால், அதன் முழுப் பொறுப்பையும் தற்போதைய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் ரஞ்சன் ராமநாயக்கவை அங்குணுகொல பெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து, கொழும்பு பகுதியில் உள்ள பாதுகாப்பான ஒரு சிறைச்சாலைக்கு மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!