கோப்பாய் சிறுமிகள் காவலூர் இளைஞர்களால் கடத்தல்!- நாவற்குழியில் மீட்பு.

நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று மீட்டுள்ளனர். சிறுமிகளை அவர்களின் பாதுகாவலர்களிடம் இருந்து கடத்திச் சென்ற 20 மற்றும் 21வயதுடைய இரண்டு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும் சிறுமிகளுடன் அதே வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளே பொலிசாரால் நாவற்குழி பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகளை ஏமாற்றி அழைத்து வந்த இளைஞர்கள் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!