எதிர்வரும் 14 நாட்களுக்குள் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் Oxford-AstraZeneca கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 14 நாட்களுக்குள் வழங்கப்படுமென கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த அனைவருக்கும் நாளை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு Oxford-AstraZeneca தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பொது சுகாதார துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் கொழும்பு மாநகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது விபரங்களை மாநகரசபை மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களிடம் வழங்கி தம்மை பதிவு செய்துகொள்ளுமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!